Thursday, January 15, 2015

நான் சந்தித்த மனிதர்களும் என்னை சந்தித்த மனிதர்களும்

வாழ்க்கை விசித்திரமானது தான் 
கூடவே மனிதர்களும் - 

முன்னால் நின்று தட்டி கொடுத்து
பன்னால் சென்று வாரி விட்டு
போலி முகம் காட்டும் மனிதர் சிலர்

போரினில் புற முதுகிட்டோடி 
மனையில் மார் தட்டி கொள்ளும் 
மன்னரை போல் சில மூடர் 

என்னிடம் பிறர் கவி பாடி 
பிறரிடம் என் கவி பாடி 
காரியம் பெறும் சில காரியவாதிகள்

தன் காரியம் பெற மட்டும் 
தொலைபேசியில் சிணுங்கும் 
சில நட்பு வட்டங்கள்

எல்லோருக்கும் புன்னகையை 
மட்டும் பரிசளித்து விட்டு
மனதிற்குள் வாய் விட்டு 
சிரித்து கொள்கிறேன்