Thursday, August 18, 2011

கணப்பொழுது   மௌனங்களில்   
தோன்றி  மறைகின்றன  
ஆயிரமாயிரம்  எண்ணங்கள் 

மறக்கவோ  மறுக்கவோ  முடியவில்லை 
நான்  கடந்து  வந்த  பாதையையும் 
அனுபவித்த  சோகங்களையும் 


கவலைகள்  நீளமானாலும்  
காலவோட்டத்தில்  கரைந்து 
காணாமல்  போகுமாமே  

ஆனால்  அந்த  மோசமான 
தருணங்களை  நொடிப்பொழுதில் 
தாங்கக்கூட  முடிவதில்லை 


விரக்தியின்  விளிம்பில் 
காயமற்ற  இடங்கள்  கூட 
ரணமாய்  வலிக்கின்றனவே ....

                                                                           

Saturday, August 6, 2011


நாங்களும் குழந்தையாகவே இருந்திருக்கலாமே இந்த குழந்தைகளை  போல எந்த கவலையும் இல்லாமல்.

   
                                     

ஜி. வி. பிரகாஷ் குமாரின் இசையில், ஹரிச்சரனின்  குரலில் பாடல் மனதை தாலாட்டுகின்றது. 

Thursday, August 4, 2011

நட்பு


நட்பு 

காலங்கள் -பல 
மாறினாலும் 
நட்பின் 
புனிதம் 
மாறாது....                                   

நட்பு

வர்ணித்துவிட 
வார்த்தைகளல்ல 
எழுதிவிட 
கவிதையல்ல 
வரைந்துவிட 
ஓவியமுமல்ல......

நட்பு

நாட்கள் பல
கடந்து சென்று
வருடங்களே
ஆனாலும்
நினைவாக
தொடர்ந்து
வரும் நட்பு


                                                           




Thursday, June 30, 2011

மௌனம்

கணப்பொழுது மௌனங்களில் 
தோன்றி மறைகின்றன
ஆயிரமாயிரம் எண்ணங்கள் 


மறுக்கவோ மறக்கவோ
முடியவில்லை - நான்
கடந்து வந்த பாதையையும் 
அனுபவித்த சோகங்களையும் 


கவலைகள் நீளமானாலும்
காலவோட்டத்தில் கரைந்து 
போய்விடுமாம் - ஆனால்


அந்த கணங்களில்-அவற்றை
தாங்க கூட முடிவதில்லை
காயமில்லா இடங்கள் கூட
ரணமாய் வலிக்கின்றனவே...........
                                                                              


Wednesday, June 29, 2011

விழி சிந்தும் குருதி

வேதனையை விழுங்கிய- என்
விழிகள் சொரிவதெல்லாம் 
கண்ணீரிரிற்கு பதிலாய் 
குருதியை தான்.......

                                                 
                                              

Tuesday, June 28, 2011

வலி

இப்போதெல்லாம் வலிகளுடன் 
வாழவே பிடித்து விட்டது  
வலிகள் மட்டுமே வாழ்க்கையில் 
இருக்கும் போது வாழ்ந்து 
தானே ஆக வேண்டும்......
                                                        

Monday, June 27, 2011

வாழ்க்கை கவிதை

வாழ்க்கையை கவிதையாக 
எழுதும் போது வரிகள் 
வலிகளை சுமக்கின்றன
வாழ்க்கை என்னும் 
புத்தகத்தில் காலம் 
என்னை புரட்டுகின்றது  
ஒவ்வொரு வயதும் 
ஒவ்வொரு பக்கமாய்-அதில் 
எத்தனை சோகங்கள் 
எத்தனை வேதனைகள் -என் 
வாழ்க்கை பயணத்தில் 



Sunday, June 26, 2011

பாசம்

யாரும் உண்மையில்லை! 
பாசங்களில் கூட கலப்படம் 
வரும் காலங்களில் கடைகளில் 
கூட்டம் வரிசையில் நிற்கும் 
பாசத்தை வாங்குவதற்காக.....

Thursday, June 23, 2011

ஹைக்கூ



மரணம்

காற்று-சுவாசிக்க 
மறந்த -என் 
கவிதையின் 
கடைசி 
நிமிடம்.
                                                 
கவிதை

உலகிலயே
மிகச்சிறந்த
பொய் 
கவிதை
                                              
தூக்கம்

தூக்கத்திலும் 
துக்கம் வருகிறது  
துக்கத்தில் 
தூக்கம் கூட 
வருவதில்லை
                                                       
கண்ணீர்

கண்களிற்கு 
வியர்க்கிறது
கண்ணீர் துளிகள்
                                                   




நண்பர்கள்

பாலைவனச் 
சோலையில்
இளைப்பாற
உதவிடும் 
மரங்கள் 
நண்பர்கள்!!!! 

நாயும் நானும்

நான் செல்லும் பொது
பின்னல் வந்தான் 
சைக்கிளில் செல்லும் 
போது துரத்தினான் 
கல்லால் எறிந்தேன் 
நின்று திரும்பினான் 
ஒரு  நாள் அம்மாவை 
கூட்டி வந்தேன்- அம்மா
தடியால் அடித்தார்
மறு நாள் அவனை 
காணவில்லை.......
மனதிற்குள் ஒரு 
நெருடல், நினைத்தேன் 
பாவம் அந்த "நாய்"




முகாரிகள்

மௌனமான முகாரிக்குள்
என் கண்கள் எனக்கான 
நீலாம்பரியை பாடி கொண்டன 
தூக்கம் கொடுரமாகி - என் 
இரவுகள் முத்தமிடுவதெல்லாம்
உள்ளத்தால் அழுகின்ற 
ஊமை காயங்களைதான்......! 

இரவு

இரவு முட்களின் 
தனிமை கீறல்கள் 
சோக குருதியை 
சொட்டும் *

உணர்வுகள் 
வெறுமையாகி 
இதயத்தை அழுத்த 
கண் இமைகள்  
சிலுவை சுமக்கும் *

தனிமை,பாசம் 
நினைவை நெரிக்க
இரு விழியும்
கண்ணீரை சொரியும்*


Wednesday, June 22, 2011

நம்பிக்கை

நாளை விடியும் என்ற
நம்பிக்கையில்லை 
நேற்று நடந்தவையும் 
நினைவில் இல்லை 
இன்று மட்டுமே 
ஞாபகத்தில்........

கண்ணீர்

தினம் தினம் தெளிவாய்
    கலங்குகின்றன 
என் கண்கள் 
   தெரிந்த முகங்களை
கூட தெரிந்தே
   தொலைக்கிறேன் 
உலகம் என்னை 
    மட்டும் விட்டு
சுழல்வது போல் 
    ஒரு பிரம்மை 
மறந்து தொலைக்க
    வழியும் இல்லை 
நினைத்து பார்க்கவும்
    தோன்றவில்லை 
கோபத்தின் உச்சம்
    கண்ணீர் என்றால்
கண்ணீரின் உச்சம் 
   மௌனம் தானோ???
 

Tuesday, June 21, 2011

தனிமை

என்னையும் சில புத்தகங்களையும் 
மட்டும் தனியே விட்டுவிடுங்கள் 
புத்தகங்கள் சலிக்கும் நேரம் 
தனிமையையும் தனிமை 
பயமுறுத்தும் தருணங்களில் 
புத்தகங்களையும் 
உறவாக்கி கொள்கிறேன்.

Monday, June 20, 2011

kana kanum kalangal

வழமையான கதை களத்திலிருந்து மாறுபட்ட   நாம் மறந்த, தொலைத்த  நமது பள்ளி கால நினைவுகளை, கல்லூரி நினைவுகளை மீட்டி பார்க்கும் அழகிய கவிதை.  நம் ஒவ் வொருவரிலும் உள்ள குணங்களை பிரதிபலிக்கும் பாத்திரங்கள். நட்புக்கு இலக்கணமான நண்பர்கள், மலரும் காதல்கள், சின்ன சின்ன சண்டைகள் என தனக்கே உரிய பாணியில் பயணிக்கின்றது  கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை. asal college of engineering இன் முதலாம்,இரண்டாம் ஆண்டு மாணவர்களான வெற்றி,கார்த்திக், பாலா, காத்தாடி,அசோக்,சரவணன்,அப்பு,ஜக்கு,பாண்டி,பாலாஜி, மதன்,வாசு,இன்பா, ஹரிப்ரியா,ஸ்வேதா,திவ்யா,ஜெயா, தமிழ்,சந்தியா,மித்ரா,ரஜினி என ஒவொருவரும் எம்மோடு பழகிய நண்பர்களை நினைவூட்டுகிறார்கள். பாலா,காத்தாடி, ஜக்கு, பாண்டி செய்யும் நகைச்சுவை ரசிப்பு. கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை vijay  t.v யில் தினமும் இரவு 7 PM இற்கு ஒளிபரப்பாகின்றது.