Thursday, June 23, 2011

ஹைக்கூ



மரணம்

காற்று-சுவாசிக்க 
மறந்த -என் 
கவிதையின் 
கடைசி 
நிமிடம்.
                                                 
கவிதை

உலகிலயே
மிகச்சிறந்த
பொய் 
கவிதை
                                              
தூக்கம்

தூக்கத்திலும் 
துக்கம் வருகிறது  
துக்கத்தில் 
தூக்கம் கூட 
வருவதில்லை
                                                       
கண்ணீர்

கண்களிற்கு 
வியர்க்கிறது
கண்ணீர் துளிகள்
                                                   




நண்பர்கள்

பாலைவனச் 
சோலையில்
இளைப்பாற
உதவிடும் 
மரங்கள் 
நண்பர்கள்!!!! 

நாயும் நானும்

நான் செல்லும் பொது
பின்னல் வந்தான் 
சைக்கிளில் செல்லும் 
போது துரத்தினான் 
கல்லால் எறிந்தேன் 
நின்று திரும்பினான் 
ஒரு  நாள் அம்மாவை 
கூட்டி வந்தேன்- அம்மா
தடியால் அடித்தார்
மறு நாள் அவனை 
காணவில்லை.......
மனதிற்குள் ஒரு 
நெருடல், நினைத்தேன் 
பாவம் அந்த "நாய்"




முகாரிகள்

மௌனமான முகாரிக்குள்
என் கண்கள் எனக்கான 
நீலாம்பரியை பாடி கொண்டன 
தூக்கம் கொடுரமாகி - என் 
இரவுகள் முத்தமிடுவதெல்லாம்
உள்ளத்தால் அழுகின்ற 
ஊமை காயங்களைதான்......! 

இரவு

இரவு முட்களின் 
தனிமை கீறல்கள் 
சோக குருதியை 
சொட்டும் *

உணர்வுகள் 
வெறுமையாகி 
இதயத்தை அழுத்த 
கண் இமைகள்  
சிலுவை சுமக்கும் *

தனிமை,பாசம் 
நினைவை நெரிக்க
இரு விழியும்
கண்ணீரை சொரியும்*


Wednesday, June 22, 2011

நம்பிக்கை

நாளை விடியும் என்ற
நம்பிக்கையில்லை 
நேற்று நடந்தவையும் 
நினைவில் இல்லை 
இன்று மட்டுமே 
ஞாபகத்தில்........

கண்ணீர்

தினம் தினம் தெளிவாய்
    கலங்குகின்றன 
என் கண்கள் 
   தெரிந்த முகங்களை
கூட தெரிந்தே
   தொலைக்கிறேன் 
உலகம் என்னை 
    மட்டும் விட்டு
சுழல்வது போல் 
    ஒரு பிரம்மை 
மறந்து தொலைக்க
    வழியும் இல்லை 
நினைத்து பார்க்கவும்
    தோன்றவில்லை 
கோபத்தின் உச்சம்
    கண்ணீர் என்றால்
கண்ணீரின் உச்சம் 
   மௌனம் தானோ???
 

Tuesday, June 21, 2011

தனிமை

என்னையும் சில புத்தகங்களையும் 
மட்டும் தனியே விட்டுவிடுங்கள் 
புத்தகங்கள் சலிக்கும் நேரம் 
தனிமையையும் தனிமை 
பயமுறுத்தும் தருணங்களில் 
புத்தகங்களையும் 
உறவாக்கி கொள்கிறேன்.

Monday, June 20, 2011

kana kanum kalangal

வழமையான கதை களத்திலிருந்து மாறுபட்ட   நாம் மறந்த, தொலைத்த  நமது பள்ளி கால நினைவுகளை, கல்லூரி நினைவுகளை மீட்டி பார்க்கும் அழகிய கவிதை.  நம் ஒவ் வொருவரிலும் உள்ள குணங்களை பிரதிபலிக்கும் பாத்திரங்கள். நட்புக்கு இலக்கணமான நண்பர்கள், மலரும் காதல்கள், சின்ன சின்ன சண்டைகள் என தனக்கே உரிய பாணியில் பயணிக்கின்றது  கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை. asal college of engineering இன் முதலாம்,இரண்டாம் ஆண்டு மாணவர்களான வெற்றி,கார்த்திக், பாலா, காத்தாடி,அசோக்,சரவணன்,அப்பு,ஜக்கு,பாண்டி,பாலாஜி, மதன்,வாசு,இன்பா, ஹரிப்ரியா,ஸ்வேதா,திவ்யா,ஜெயா, தமிழ்,சந்தியா,மித்ரா,ரஜினி என ஒவொருவரும் எம்மோடு பழகிய நண்பர்களை நினைவூட்டுகிறார்கள். பாலா,காத்தாடி, ஜக்கு, பாண்டி செய்யும் நகைச்சுவை ரசிப்பு. கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை vijay  t.v யில் தினமும் இரவு 7 PM இற்கு ஒளிபரப்பாகின்றது.