Thursday, June 30, 2011

மௌனம்

கணப்பொழுது மௌனங்களில் 
தோன்றி மறைகின்றன
ஆயிரமாயிரம் எண்ணங்கள் 


மறுக்கவோ மறக்கவோ
முடியவில்லை - நான்
கடந்து வந்த பாதையையும் 
அனுபவித்த சோகங்களையும் 


கவலைகள் நீளமானாலும்
காலவோட்டத்தில் கரைந்து 
போய்விடுமாம் - ஆனால்


அந்த கணங்களில்-அவற்றை
தாங்க கூட முடிவதில்லை
காயமில்லா இடங்கள் கூட
ரணமாய் வலிக்கின்றனவே...........
                                                                              


Wednesday, June 29, 2011

விழி சிந்தும் குருதி

வேதனையை விழுங்கிய- என்
விழிகள் சொரிவதெல்லாம் 
கண்ணீரிரிற்கு பதிலாய் 
குருதியை தான்.......

                                                 
                                              

Tuesday, June 28, 2011

வலி

இப்போதெல்லாம் வலிகளுடன் 
வாழவே பிடித்து விட்டது  
வலிகள் மட்டுமே வாழ்க்கையில் 
இருக்கும் போது வாழ்ந்து 
தானே ஆக வேண்டும்......
                                                        

Monday, June 27, 2011

வாழ்க்கை கவிதை

வாழ்க்கையை கவிதையாக 
எழுதும் போது வரிகள் 
வலிகளை சுமக்கின்றன
வாழ்க்கை என்னும் 
புத்தகத்தில் காலம் 
என்னை புரட்டுகின்றது  
ஒவ்வொரு வயதும் 
ஒவ்வொரு பக்கமாய்-அதில் 
எத்தனை சோகங்கள் 
எத்தனை வேதனைகள் -என் 
வாழ்க்கை பயணத்தில் 



Sunday, June 26, 2011

பாசம்

யாரும் உண்மையில்லை! 
பாசங்களில் கூட கலப்படம் 
வரும் காலங்களில் கடைகளில் 
கூட்டம் வரிசையில் நிற்கும் 
பாசத்தை வாங்குவதற்காக.....