Saturday, June 13, 2015

நிசப்தமான இரவுகளில்
நான் கடந்து வந்த பாதையை
மீட்டி பார்த்து கொள்கிறேன்

நினைத்து பார்த்து
பெருமை பட்டு கொள்ள
அவை ஒன்றும் வெற்றிகளை
மட்டுமே தந்தவையல்ல

பாதையில் முட்கள் இருக்கும்
என்றோ - நான் அதில் பயணிப்பேன்
என்றோ ஒரு நாளும் - நினைத்து
பார்த்ததில்லை  நான்

இப்போதெல்லாம் என் பாதைகளில்
மலர்கள் தூவப்படுவதும்  இல்லை
சின்ன சின்ன சந்தோசங்களும்
இல்லை

மாறாக என் வாழ்க்கை
முட்களில் பயணித்தே
காயம் பட்டு கொள்கிறது - என் இரவு
உறக்கம் கூட முட் படுக்கையில் தான்



No comments:

Post a Comment