கணப்பொழுது மௌனங்களில்
தோன்றி மறைகின்றன
ஆயிரமாயிரம் எண்ணங்கள்
மறுக்கவோ மறக்கவோ
முடியவில்லை - நான்
கடந்து வந்த பாதையையும்
அனுபவித்த சோகங்களையும்
கவலைகள் நீளமானாலும்
காலவோட்டத்தில் கரைந்து
போய்விடுமாம் - ஆனால்
அந்த கணங்களில்-அவற்றை
தாங்க கூட முடிவதில்லை
காயமில்லா இடங்கள் கூட
ரணமாய் வலிக்கின்றனவே...........
No comments:
Post a Comment