Saturday, March 24, 2012

வெண்பனி மூடிய வீதிகள்
பச்சையமிழந்த மரங்கள் 
தாம் துளிர்விடுவோம் என்ற 
நம்பிக்கையில் இன்னமும் 
கையசைத்து மகிழ்கின்றன 

உதிர்வதும் தழைப்பதும்
மறுக்க முடியாதென்றாலும்
பழங்கதை பேசி மகிழ
கொஞ்ச பழுத்தல்களாவது
மிச்சமிருந்திருக்கலாம்

இறைவனின் படைப்பில் தான்
எத்தனை பாகுபாடு
சஹாராவில் வீசும் வெப்பத்தை
இங்கும் கொஞ்சம் தந்திருக்கலாம்
ஏனோ இந்த கஞ்சத்தனம்


வசந்த காலம் ஆரம்பம் என்று
யாரோ சொல்லியதை நம்பி
குதூகலத்துடன் புறப்பட்டேன்
நெற்றியில் சில்லென விழுந்தது
வானம் தூவிய பனிதுளி...........
                                                                   அகல் 






No comments:

Post a Comment